Friday 1 June 2012

     ENGLISH VERSION


ஒம் நமசிவாய

ஸ்ரீ  பெரியநாயகி   உடனுறை 

 ஸ்ரீ  அரியநாதர்

 ஆலயத்  திருப்பணி  கைங்கர்ய  பத்திரிகை

தற்போதய  நிலையில்  எங்கும்  புதிய  ஆலயங்களை  கட்டுவதை     வீட்டு  பழமையான  ஆலயங்களை  புதுபித்து  வழிபாடு  செய்ய  ஊக்குவிப்பதே  சிறப்பானதாக உள்ள நிலையில், அனைவரும்   கலந்து   திருப்பணி  செய்து  அவன்  அருளை  பெறுமாறு  வேண்டுகிறோம் .

சிவாலய  பணிகளில்  ஈடுபட்டால்  நம்  தீவினைகள் முற்றிலுமாய் நீக்கப்பட்டுவிடும்   அத்துடன்  நல்வினைகள்  சேரும். ஆலயத்திருப்பணி களில்  ஈடுபடுதல் ,  உடலுழைப்பு  தரல் , இடம்  அல்லது மனை தரல், குளம் தூர்  எடுத்தல் , கல் , மணல்  அளித்தல்  ஆகிய  எல்லாம் மிக மிக  சிவ புண்ணிய செயல்  என்பதை  நம் பழைய  பாடல் பகரும் இப்படி .
          
                         " புல்லினால்  கோடி  யாண்டு , புது  மண்ணால்   பத்துகோடி
                          செல்லுமா   ஞாலந்தன்னில்  செங்கல்லால் நுறு  கோடி
                          அல்லியங்கோதை  மின்னே  ஆலயம்  மடங்கள்  தம்மை
                         கல்லினால் புதுக்கினோர்கள்  கயிலை விட்டு அகலாரன்றே "